Sekara-வின் "முற்றுப்பெறாத தற்கொலை"
நான் அவளை மறக்கும் நாள்.. நாலுபேர் என்னை சுமக்கும் நாள்!!!... அவளின் இழப்பு பேரிழப்பு இல்லை.. உயிர் இழப்பு மட்டும் தான்!!!...
Friday, 3 February 2012
Sekara-வின் கவிதைகளின் கரை
| Reactions: |
Monday, 23 January 2012
Sekara-வின் "பைத்தியக்காரன்"
| Reactions: |
Friday, 20 January 2012
Sekara-வின் வெட்கப்பட்டாள்
என்னவளே..
உனக்கு நினைவிருக்கிறதா
அந்த அழகான இளமாலை
நீயும், நானும் நாமாக பேசிய நேரம்
எப்போது என்னை முதன்முதலாக
காதலிக்க ஆரம்பித்தாய்??..
என்று கேட்டாய்.. நீ
வாசலில் போடப்பட்டிருந்த
ஒரு கோலத்தை உன்னிடம் காட்டி..
எப்படி இருக்கு??.. என்றேன்
"ரொம்ப அழகா இருக்குடா" என்றாய்
இந்த கோலம் எந்த புள்ளியில்
ஆரம்பிக்கப்பட்டது?? என்று கேட்டேன்..
அது எப்படிடா தெரியும்??? என்றாய்
உன்மீதான என் காதலும்
அதுபோலதான்டி என்றேன்...
பதிலுக்கு வெட்கப்பட்டாய்..
இளமாலையையும்
கோலத்தையும்விட மிகஅழகாய்..
இளமாலையையும்
கோலத்தையும்விட மிகஅழகாய்..
| Reactions: |
Tuesday, 3 January 2012
Friday, 30 December 2011
Sekara-வின் "உயிர் வலிக்க காதலிக்கிறேன்"
யாருமே இல்லாத வெட்ட வெளியிலும்
கை கோர்த்துக்கொண்டு நடந்தோம்..
நமக்கென வரையறுக்கப்பட்ட
நமக்கென வரையறுக்கப்பட்ட
அந்த கல்லூரி சாலையில்
நீ இல்லாத இரவுகளை நானும்
நான் இல்லாத பொழுதுகளை நீயும்..
பேசுவதற்கு ஆகாயம் அளவிருந்தும்
பேசுவதற்கு ஆகாயம் அளவிருந்தும்
பிரிவையே பெரிதாய் பேசினோம்..
latest கவிதை??.. என்ற உன்னிடம்
"காதலையும், அதை படைத்த கடவுளையும்
இந்த நொடிகளில் உணர்கிறேன்" என்றேன்..
அடப்பாவி!!..
"நெசமாவே என்ன பத்திதான் சொல்லுறியா??"
என்று கேட்ட உன்னிடம்..
உன்னை
"உயிர் வலிக்க காதலிக்கிறேன்" என்று
எப்படி வெறும் வாயால் சொல்வது!!..
என்று கேட்ட உன்னிடம்..
உன்னை
"உயிர் வலிக்க காதலிக்கிறேன்" என்று
எப்படி வெறும் வாயால் சொல்வது!!..
| Reactions: |
Saturday, 24 December 2011
Sekara -வின் "ஆறாத காயங்கள்"
விதையாய் புதைந்து கிடந்தேன்..
பருவமழை போல வந்தாள்
என் பருவ வயதில்
அவள் பரிச்சியமானாள்
காதலோ விருச்சகமாகியது..
பருவகாலங்களில் பயின்று பெற்றதைவிட
பருவமாற்றம் பயிற்றுவித்தது பலபல..
தாயின் கருவறையில் இருந்த சுகத்தை
அவளின் கருவிழியில் கண்டேன்.
கடைக்கண் பார்வை என்றாலும்
அதிலே கருகி காணாமல் போனேன்..
அர்த்தமில்லா வாழ்வை அர்த்தமாக்க
அவளை நோக்கி ஓடினேன்..
நொடிப்பொழுதே பூவில் அமர்ந்து செல்லும்
வண்ணத்துபூச்சி போல
ஓடிவிட்டால் என்னை விட்டு!!..
பாதங்களை கொஞ்சம் ஆழப்பதித்து
சென்று விட்டாள் போல
இதயம் இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது..
அர்த்தமில்லா வாழ்வை அர்த்தமாக்க
அவளை நோக்கி ஓடினேன்..
நொடிப்பொழுதே பூவில் அமர்ந்து செல்லும்
வண்ணத்துபூச்சி போல
ஓடிவிட்டால் என்னை விட்டு!!..
பாதங்களை கொஞ்சம் ஆழப்பதித்து
சென்று விட்டாள் போல
இதயம் இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது..
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)




