Search This Blog

Loading...

Monday, 12 September 2011

ஏதோ தோனுச்சு!!!...


உன் கைக்குட்டையின் கூக்குரல் கேட்டாயா???
அது குட்டையாக இருப்பதால்தான் 
அதை நீ  உடுத்துவதில்லையாம்....
ஆனால் நீ உடுத்தும் துப்பட்டாவோ 
உன் உள்ளாடைகளை நினைத்து 
வருத்தப்படுகிறது...
உன் உள்ளாடை உலகத்தின் 
உருவகம்தான் என்ன???..
 
****************
அடைமழை விடாதாம்.. "வானிலை அறிக்கை"
பாவம்.. அறிவியல் அறினர்களுக்கு 
எப்படி தெரியும்???... 
வீட்டினுள் இருக்கும் உன்னை முழுவதுமாய் 
நனைக்கத்தான் மழை பெய்கிறது என்று!!!...

******************
என் அழகின் அழகியே.. 
நீ சிரிக்கும் போது, சிணுங்கும் போது..
உண்ணும் போது, உறங்கும் போது..
குடிக்கும் போது, குளிக்கும் போது..
அழும் போது, அரவணைக்கும் போது...
உன் வெறும் concrete வீடு எப்படிதான்  தாங்குகிறது...
இதெல்லாம் போகட்டும்.. 
இருளை நெசவு செய்து படைத்த உன்
இளங்கூந்தலை நீயே சரிசெய்யும்போது
உன் வீட்டு கண்ணாடி என்னதான்டி செய்யும்???...

******************
நான்கு சுவர் எழுப்பினால் 
அது வீடாகிவிடுமாம்...
நீ வந்து போ
அது கோயிலே ஆகிவிடும்!!!...
  
*******************
பக்தர் கூட்டம் 
அந்த கோயிலை சுற்றுகிறது பார்த்தாயா???
ஆனால்  அந்தகடவுள் உன்னை சுற்றுகிறானே 
உன் தரிசனம் பெற!!!...


********************
நேற்று எழுத நினைத்த 
உன் அழகைப்பற்றிய
கவிதையை இன்று 
எழுத நினைக்கையில் 
முடியவில்லை!!!...நிறுத்திகொள்.. 
தினம்தினம் அழகாவதை!!!..

*************************
உன் தங்கநகைகள்
உன் முகப்பருக்களின் 
நிறத்தை பார்த்து 
தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறது!!!...

**********************   
உன் வீட்டு வாழைமரத்தின் 
புலம்பல்  கேட்டாயா???.
நீ குளித்த தண்ணீரில் 
விளைந்த வேப்பங்காய்  கூட 
விளாம்பழமாய் இனிக்கிறதாம்!!!...


*********************
உன் உதட்டுசாயம் படாமலேயே 
உட்செல்கிறதாம் உன் உணவுகள்!!!...

அடிப்போடி....
இதெல்லாம் ஏதோ தோனுச்சு..
அதான் எழுதினேன்!!!...
--Sekar

0 Comments:

Post a Comment