Search This Blog

Loading...

Friday, 21 January 2011

மறக்க நினைக்கும் நிமிடங்கள்...

உள்ளங்கை ரேகைக்கு 
உட்பட்டதா நம் வாழ்க்கை -- இல்லையில்லை!!!...
இலையோடு இலை இருந்தாலும் 
இலையுதிர் காலத்தில் பிரிந்தாக வேண்டும் 
பிரிவென்பது எழுதப்படாத கட்டாயம்!!!...

கல்லூரி காலங்கள் முடிந்து 
உன்னை வழியனுப்பிய நாள் அது..

May-01-2005, மதியம் 01 : 30 மணி
இடம்: திருச்சி ரயில் நிலையம் 

தொடர் வண்டியில்...
"போய் வருகிறேன்"... என்று நீயும் 
"போய் வா" என்று நானும் 
சொல்லிய அந்த விருப்பமில்லா தருணங்களில் 
வண்டி நகர்ந்ததே.. என் இதயத்தை கிழித்து கொண்டு!!!...
அந்த கொடூர நிமிடங்களின் வலியை 
நான் மறக்க நினைக்கிறன்....

0 Comments:

Post a Comment