நாட்கள் வருடங்களாய் உருண்டபின்
நான் கண்ட கல்லூரி நண்பர்கள்
நான் கண்ட கல்லூரி நண்பர்கள்
என்மீது பிண வாடை
அடிப்பதாய் சொல்கிறார்கள்!!..
ஒருவேளை
என்னுள் வாழும் நீ இறந்து விட்டாயோ??..
இறந்திருந்தால் எனது தற்கொலையும்
முற்றுபெற்றிருக்குமே!!..
இல்லை
நான் இறந்து விட்டேனா??..
இறந்து கொண்டிருக்கிறேனா??..
நான் இறந்தால் என்னுள் வாழும் நீயும்
உன் நினைவுகளும் இறந்துவிடுமே
என்று நினைக்கும் போது
"நரகவாழ்க்கை தொடரட்டும்" என்றுதான் தோன்றுகிறது!!..
...
......
.........
..............
....................
...
......
.........
..............
....................
நான் உயிரோடு இருப்பது
எல்லாருக்கும் தெரியும்..
என்னுயிர் ".................." யோடு இருப்பது
"......................."க்கு மட்டும்தானே புரியும்!!..

0 Comments:
Post a Comment